×

காவலர் வீரவணக்க நாள்!: பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி..!!

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி சைலேந்திர பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக டிஜிபி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முப்படை அதிகாரிகள், காவல் உயரதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வானது துப்பாக்கி குண்டுகள் முழங்க நடைபெற்று வருகிறது. முதலாவதாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ச்சியாக காவல்துறை உயரதிகாரிகள், முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத்துறை  டிஜிபி டி.கே.ரவி, சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.ஜே.நாராயணன், ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் லத்திகா சரண், நட்ராஜ், டி.கே.ராஜேந்திரன், முத்துக்கருப்பன், பாலசந்தர், விஜயகுமார் மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்று ஒவ்வொருவராக காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், காவல்துறையினர் என மொத்தம் 264 பேர் பணியின் போது மரணமடைந்துள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post காவலர் வீரவணக்க நாள்!: பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Police Salute Day! ,DGP ,Shailendra Babu ,CHENNAI ,Police Veerawanaka Day ,Mylapore Police ,Police Veterans Day ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...