- அரசு
- முதல்வர்
- ஸ்டாலின்
- தேவர் குரு பூஜை
- மதுரை
- அமைச்சர்
- ராஜா கன்னாபன்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தேவர் குரு பூஜை விழா
- இராமநாதபுரம்...
- மு.கே ஸ்டாலின்
- தேவர் குருபூஜை விழா
- தின மலர்
மதுரை: அக்.30ம் தேதி தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115 ஜெயந்தி விழா அக்டோபர் 28, 29, 30 தினங்களில் நடைபெற உள்ளது. 30-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மரியாதை செய்ய உள்ளனர், அதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அப்போது தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அக் – 30 தேவர் குருபூஜை விழாவிற்கு முதலமைச்சர் வர உள்ளதாக தெரிவித்தார். தங்க கவசம் விவகாரத்தில் அரசு துணை நிற்கும் என்றார்….
The post தங்க கவசம் விவகாரத்தில் அரசு துணை நிற்கும்: அக்.30ம் தேதி தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.