×

தேனாம்பேட்டை கல்லூரி வளாகத்தில் மாணவியின் கையைப் பிடித்து தகராறு செய்த மாணவன் கைது: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

சென்னை: பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர வேண்டும் என்றுக்கோரி, தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி முன்பு மாணவி ஒருவரை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த மாணவனை போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்தவர் ராணி (18), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தற்போது தேனாம்பேட்டையில் பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் ராணி கல்லூரிக்கு வந்தார். பிறகு மாலை கல்லூரி முடிந்து வெளியே வரும் போது, கல்லூரி வளாகத்தின் முன்பு தன்னுடன் பள்ளியில் படித்த அப்ரிடி (18) என்ற வாலிபர் நின்று இருந்தார். அவரை பார்த்ததும் ராணி கடந்து சென்றார். உடனே ராணியை கையை பிடித்து ‘என்னை நீ மீண்டும் காதலிக்க வேண்டும். உன்னை என்னால் மறக்க முடியவில்லை’ என்று கூறி கல்லூரியின் முன்பே கையைப்பிடித்து இழுத்து எனக்கு பதில் சொல் என்று அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி கையை விடு என்று கூச்சலிட்டார். அதன் பிறகு அப்ரிடி கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து ராணி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்த அப்ரிடியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அப்ரிடி கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ராணியை காதலித்து வந்துள்ளார். பள்ளி பருவம் என்பதால் ராணிக்கு என்ன என்று தெரியாமல் அப்ரிடியுடன் பழகி வந்துள்ளார். பிறகு 2018ம் ஆண்டு இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அப்ரிடி அறிவுறுத்தல்படி ராணி தனது வீட்டில் இருந்து சில நகைகளை கொண்டு வந்து கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகை மாயமானது குறித்து மகள் ராணியிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, உடன் படிக்கும் மாணவன் அப்ரிடியிடம் கொடுத்துள்ளதாக கூறி உள்ளார். பிறகு ராணியின் பெற்றோர் மாணவன் அப்ரிடி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி போலீசார் இரண்டு குடும்பத்தினரையும் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ராணி, அப்ரிடியிடம் பேசமால் இருந்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அப்ரிடி தற்போது ராயப்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ராணி கல்லூரிக்கு செல்லும் போது அடிக்கடி பின் தொடர்ந்து தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதன்படி தான், நேற்று முன்தினமும் தேனாம்பேட்டையில் ராணி பயிலும் கல்லூரிக்கு நேரில் சென்று கையை பிடித்து இழுத்து தகராறு செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவன் அப்ரிடி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், வீண் தகராறு செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்….

The post தேனாம்பேட்டை கல்லூரி வளாகத்தில் மாணவியின் கையைப் பிடித்து தகராறு செய்த மாணவன் கைது: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Thenampet ,CHENNAI ,Thenampettai ,Dinakaran ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...