×

விருகம்பாக்கம் மாணவர் தங்கும் விடுதியில் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மாணவர் தங்கும் விடுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீசார் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சந்திர ஓபுல் ரெட்டி (21). இவர், மதுரவாயல் பகுதியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். மாணவன் சந்திர ஓபுல் ரெட்டி விருகம்பாக்கம் நியூ காலனி 2வது முதன்மை சாலையில் உள்ள ஒரு மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். தங்கும் விடுதியில் உள்ள விநாயகம் என்ற மாணவரனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதனால் விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் விநாயகத்தின் பிறந்த நாளை விடுதியின் வெளியே கேக் வெட்டி கொண்டியுள்ளனர்.அப்போது பிறந்த நாள் விழாவுக்கு சந்திர ஓபுல் ரெட்டி மட்டும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் விடுதி அறைக்கு சென்று பார்த்த போது, மாணவன் சந்திர ஓபுல் ரெட்டி விடுதியின் பக்கவாட்டில் கூரை போடுவதற்காக பயன்படுத்தும் 2 மரத்துண்டுகளை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே சக மாணவர்கள் சம்பவம் குறித்து விடுதியின் உரிமையாளர் ஜெனனி (52) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடன் தங்கி இருந்த ராஜா என்ற மாணவனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….

The post விருகம்பாக்கம் மாணவர் தங்கும் விடுதியில் பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Virugampakkam ,Chennai ,Andhra ,Virukampakkam ,
× RELATED தனியார் மதுபாரில் தகராறு பெண் செய்தி வாசிப்பாளரை தாக்கிய பவுன்சர் கைது