×

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு: தீபாவளி கொண்டாட வெளியூர் செல்பவர்கள் அதிர்ச்சி

சென்னை : தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சென்னையில் தங்கி உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பேர் தீபாவளி விடுமுறையை வெளியூர் செல்ல ஆயுத்தமாக்கியுள்ளனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 250 பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு செல்வதற்காக 18,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை குறிவைத்து வழக்கம் போல் ஆம்னி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் இருந்து வரும் 22-ம் தேதி திருநெல்வேலி செல்ல குறைந்த பட்சம் ரூ.1,899 முதல் ரூ.2,938 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு ரூ.1,799 முதல் ரூ.3,400 வரை, சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.3000 வரை கட்டணம் உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பண்டிகை நேரத்தில் இந்த பிரச்சனை நீடிப்பதால் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    …

The post ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு: தீபாவளி கொண்டாட வெளியூர் செல்பவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Diwali festival ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...