புதுடெல்லி: ஒழிந்து விட்டதாக கருதப்படும் கொரோனா பரவல், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நாடுகளில் வேகமாக பரவி, மக்களை தாக்குகிறது. ஒமிக்ரான் வைரசில் இருந்து உருமாற்றம் பெற்று உருவானதுதான் பிஏ-5 வைரஸ். இப்போது, இந்த வைரஸ் பிஎப்-7 என்ற புதிய வைரசாக உருமாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவில் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குஜராத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகி இருக்கிறது. இதனால், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா தாக்குதல் வேகம் பிடிக்கும் என பீதி கிளம்பியுள்ளது. …
The post கொரோனா: பீதி கிளப்பும் புது வைரஸ் appeared first on Dinakaran.