×

உடலை கத்தியால் கீறி, மசாலா தடவி ரசித்த கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை முகமது ஷாபி, பகவல் சிங், லைலா  ஆகியோர் கத்தியால் கீறி கறி மசாலா தடவி அவர்கள் துடிப்பதை  பார்த்து ரசித்த கொடூர தகவல் விசாரணையில் தெரிந்துள்ளது. கேரள  மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, கேரளாவை சேர்ந்த ரோஸ்லி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான பகவல் சிங், லைலா, ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில்  விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில், நாளுக்கு நாள்  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல்  முழுவதும் 3 பேரும் சேர்ந்து கத்தியால் கீறி, காயங்களில் கறி மசாலா தடவி  உள்ளனர். அப்போது, அந்த பெண் வேதனையில் அலறித் துடிப்பதை பார்த்து அவர்கள்  ரசித்துள்ளனர். அப்படி துடிக்கத்  துடிக்க இறந்தால்தான் நரபலியின் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்று ஷாபி  தங்களிடம் கூறியதாக பகவல் சிங்கும், லைலாவும் விசாரணையில் கூறியுள்ளனர். பகவல் சிங், லைலாவின் சொத்துகளை அபகரிக்கவும்  ஷாபி  திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிந்துள்ளது.ஏற்கனவே, ஸ்ரீதேவி  என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கிதான் பகவல் சிங்கை ஷாபி  ஏமாற்றினார். அதேபோல், வேறு ஒரு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி நரபலி  கொடுக்கப்பட்ட சம்பவத்தை கூறி மிரட்டி 2 பேரின் சொத்துகளையும் பறிக்க  ஷாபி திட்டம் தீட்டி இருந்தாராம். இதற்கிடையே ஷாபி, பகவல் சிங் ஆகியோர்  மீது இரட்டை கொலை வழக்குடன், பலாத்காரம், நகை பறிப்பு வழக்கையும் பதிவு  செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 2 பேருக்கும் நேற்று எர்ணாகுளம் மருத்துவமனையில் ஆண்மை  பரிசோதனை நடத்தப்பட்டது.  * மேலும் ஒரு பெண் நரபலி? ஆலப்புழா அருகே உள்ள கடக்கரப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த பிந்து   பத்மநாபன் (51) என்ற பெண் சில வருடங்களுக்கு முன் காணாமல் போனார். இந்த வழக்கை விசாரித்து வரும்   ஆலப்புழா போலீசாருக்கு, இந்த பெண்ணையும் ஷாபி நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு, ஷாபியிடம்  விசாரித்தனர். இதில் கிடைத்த தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை….

The post உடலை கத்தியால் கீறி, மசாலா தடவி ரசித்த கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mohammad Shafi ,Bhagawal Singh ,Laila ,Kerala ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...