×

மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நந்தா. இவருடைய மகன் விஷ்ணுராஜ் (13). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். தண்டையார்பேட்டை சவுத் ரயில்வே யார்டில் நண்பர்களுடன் காத்தாடி பறக்க விட்டு விளையாடியுள்ளான். அப்போது, மின் கம்பியில் காத்தாடி சிக்கிக்கொண்டதை ஏறி எடுக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.இதில் சிறுவன் உடல் முழுவதும் கருகி விழுந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சிறுவனை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்….

The post மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Nanda ,Puduvannarapet Tsunami Residence ,Vishnuraj ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...