×

அதிக வட்டி தருவதாக வாடிக்கையாளரை ஏமாற்றிய பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை மேலாளர் கைது

சிவகங்கை: தேவகோட்டையில் வாடிக்கையாளரிடம் ரூ.36 லட்சம், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் தங்க காசுகளை மோசடி செய்த பேங்க் ஆஃப் பரோடா வங்கி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.தேவகோட்டையை சேர்ந்த அல்லா ஹையர் சையத் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று பல லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்தார். அவர் நடைப்பயிற்சி சென்றபோது தேவகோட்டை பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை மேலாளர் பாலகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தங்களது வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதனை நம்பி பாலகிருஷ்ணனின் வங்கி லாக்கரிலேயே வைக்குமாறு ரூ.36 லட்சம், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் தங்க காசுகளையும் ஒப்படைத்துள்ளார்.நீண்ட நாட்கள் அதனை திருப்பி தராமல் பாலகிருஷ்ணன் அலைக்கழித்ததால் சிவகங்கை எஸ்பி செந்தில்குமாரிடம் அல்லா ஹையர் சையத் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், புகாரில் உண்மை இருந்ததால் மேலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். …

The post அதிக வட்டி தருவதாக வாடிக்கையாளரை ஏமாற்றிய பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கிளை மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Bank of Baroda ,Sivagangai ,Devakotai ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்