×

1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் சிறையிலடைப்பு

சென்னை: மயிலாப்பூர் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளி உட்பட 2 குற்றவாளிகள் சிறையிலடைக்கப்பட்டனர். சென்னை, திருவல்லிக்கேணி, கோகுலம் காலனி, எண்.16/26 என்ற முகவரியில் வசித்துவரும் ஹரிஷ், வ/22, த/பெ.பத்மநாபன் என்பவர் E-2 இராயப்பேட்டை காவல் நிலைய  சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 19 வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 22.08.2022 அன்றும், முனிர்பாட்ஷா, வ/22, த/பெ.ஷாஜகான், எண்.266, ரோட்டேரி நகர், இராயப்பேட்டை, சென்னை என்பவர் மீது குற்ற வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 23.09.2022 அன்றும் துணை ஆணையாளர், மயிலாப்பூர் காவல் மாவட்டம் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். ஆனால் ஹரிஷ் கடந்த 14.09.2022 அன்று, மெரினா பகுதியில் ஒருவரை  கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக D-5 மெரினா காவல் நிலையத்திலும், முனிர்பாட்ஷா கடந்த 08.10.2022 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். எதிரிகள் ஹரிஷ், முனிர்பாட்ஷா  ஆகியோர் 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர், திருமதி.திஷா மிட்டல், இ.கா.ப., அவர்கள் எதிரி ஹரிஷ் என்பவருக்கு கு.விமு.ச பிரிவு 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 341 நாட்களும், எதிரி  முனிர்பாட்ஷா என்பவருக்கு கு.விமு.ச பிரிவு 109ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து, மீதமுள்ள 349 நாட்களும் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி எதிரிகள் இருவரும் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapore ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு