×

மாற்றுப் பணி வழங்க தொழில்நுட்ப கவுரவ விரிவுரையாளர்கள் மனு

சென்னை: அரசு, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றி பணி விடுவிப்பு பெற்ற 1311 கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக நேற்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்க அலுவலகத்தில் மனு அளித்தனர்.  பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள் கூறியதாவது: ஒடிசா மாநிலத்தில் பகுதி நேரம் மற்றும் தொகுப்புதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றியது போல தமிழகத்திலும் மாற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம். கருணாநிதியின் ஆட்சியின் போது 40,000க்கும் மேற்பட்டோருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. அதேபோல் திமுக ஆட்சியில் பணி நிரந்தரம் வழங்கி 1,311 குடும்பங்களையும் வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

The post மாற்றுப் பணி வழங்க தொழில்நுட்ப கவுரவ விரிவுரையாளர்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...