×

மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் வாபஸ்

மும்பை: மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த சிவசேனாவை சேர்ந்த ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதி இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியான சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி சார்பில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பாஜ சார்பில் முர்ஜி படேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள்.முன்னதாக, கடந்த ஞாயிறன்று, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர்  பாஜ தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று, பாஜ வேட்பாளர் முர்ஜி படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால், ருதுஜா லட்கே போட்டியின்றி தேர்வாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மனுவை வாபஸ் பெற்றதாக பாஜ தரப்பில் கூறப்பட்டுள்ளது….

The post மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : BJP ,Maharashtra ,Mumbai ,Shiv Sena ,Ramesh Ladke ,Andheri East ,MLA ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி