×

நாயை துன்புறுத்தியவர் கைது

பெரம்பூர்: அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (42). விலங்குகள் நல ஆர்வலர். அயனாவரம் பகுதியில் உள்ள தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு தினந்தோறும் உணவுகள் வைத்து வருகிறார். கடந்த 7ம் தேதி இவர், அயனாவரம் பெரியார் சாலை ஹவுசிங் போர்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (52) என்ற ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்த தெரு நாய் ஒன்றை குச்சியால் அடித்துள்ளார். இதுகுறித்து ஈஸ்வரி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் எனது வீட்டருகே உள்ள நாய் மற்றும் பூனைகளை அடிக்கடி நடராஜன் என்பவர் அடித்து துன்புறுத்துவதாகவும், இதனை தட்டிக் கேட்டால் தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அயனாவரம் போலீசார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்….

The post நாயை துன்புறுத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ishwari ,Ayanavaram NMK Street ,Ayanavaram ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு