×

ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா

அமிதாப் பச்சன், ரஜினி என திரைத்துறையை சேர்ந்த பலரையும் கடுமையாக விமர்சிப்பது என டிவிட்டரில் அதகளம் செய்து வந்தவர் ராம்கோபால் வர்மா. ஒரு காலத்தில் நல்ல சினிமாக்களை கொடுப்பதில் மட்டுமே பெயர் பெற்றிருந்த இவர், இப்போது தனது படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு மற்றவர்களின் படைப்புகளை விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

இந்நிலையில் மீண்டும் டைரக்‌ஷனுக்கு திரும்பியவர் லட்சுமியின் என்டிஆர் படத்தை தெலுங்கில் இயக்கினார். அடுத்து கோப்ரா என்ற படத்தையும் தெலுங்கில் இயக்குகிறார். இதில் முதல்முறையாக அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் வர்மா, பயங்கரமான குற்றவாளியை பிடிக்கும் வேடத்தில் நடிக்கிறார்.

Tags : Ramkopal Varma ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு...