×

குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு குண்டாஸ் பாய்ந்தது

செங்கல்பட்டு: குன்றத்தூர் அருகே மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட முன்விரோத தகராறில், ஒரு ரவுடியின் உடலை வெட்டி கிணற்றுக்குள் வீசி கொன்ற வழக்கில் கைதான 5 பேர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (25). பிரபல ரவுடி. இவர், கடந்த வருடம், நவம்பர் மாதம் மறைமலைநகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது திருமுடிவாக்கத்தை சேர்ந்த மற்றொரு ரவுடி கருப்பு (எ) தமிழழகன், தனது கூட்டாளிகளுடன் வந்து, பிரகாஷை வெளியே அழைத்து சென்று, சரமாரி வெட்டி உடலை துண்டாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது சடலத்தை, அங்குள்ள கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகினர்.இப்புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், ரவுடிகள் பிரகாஷ் மற்றும் தமிழழகனுக்கும் இடையே அப்பகுதியில் மாமூல் வசூலிப்பதில் முன்விரோத தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருப்பது தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக ரவுடி தமிழழகன், தமிழ்மணி, மோசஸ், கட்டிங் சிவா, சூர்யா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 5 பேர்மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரக கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி தமிழழகன் உள்பட 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post குன்றத்தூர் அருகே ரவுடி கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Kundas ,Kundatore ,Chengalpattu ,Mamul ,Kunthatur ,Rudy ,Kundatur ,Dinakaran ,
× RELATED திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர் மீது குண்டாஸ்