×

கேரளாவில் சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்தவர் பெண் மந்திரவாதி வீட்டில் தங்கிய 2 வாலிபர்கள் மாயம்: நரபலி கொடுக்கப்பட்டார்களா?

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம்,  பத்தனம்திட்டா அருகே தர்மபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா என்ற  பெண்  உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே பத்தனம்திட்டாவில்   மலையாளப்புழா என்ற இடத்தில் ஷோபனா என்ற பெண் மந்திரவாதி கைது   செய்யப்பட்டார். பேய் விரட்டுவதாக கூறி சிறுவர், சிறுமிகள் உட்பட பலரை   நிர்வாணப்படுத்தி அடித்து, சித்ரவதை செய்வதாக கூறப்பட்ட புகாரில் இவரையும், இவரின் கள்ளக்காதலனான உண்ணிகிருஷ்ணனையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  மலையாளப்புழாவில்   ஷோபனா கடந்த 8 வருடங்களுக்கு மேலாக, ‘வாசந்தி அம்மா மடம்’ என்ற பெயரில் மந்திரவாதம் செய்து வந்துள்ளார். ஷோபனாவுக்கு உதவியாக அவ்வப்போது யாராவது அவருடன் தங்கி இருப்பார்கள். இந்த  மடத்தில்  தங்கியிருந்த 2 வாலிபர்கள் சமீபத்தில்  மாயமானார்கள். இவர்கள் சொந்த ஊருக்கும் செல்லவில்லை. இதனால், அவர்கள்  நரபலி கொடுக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post கேரளாவில் சிறுவர், சிறுமிகளை சித்ரவதை செய்தவர் பெண் மந்திரவாதி வீட்டில் தங்கிய 2 வாலிபர்கள் மாயம்: நரபலி கொடுக்கப்பட்டார்களா? appeared first on Dinakaran.

Tags : Kerala Mayam ,Thiruvananthapuram ,Padma ,Dharmapuri Bennagaram ,Pathanamthitta, Kerala State ,Kerala ,Mayam ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...