×

தொடர் மழையால் விலை வீழ்ச்சி; அறுவடைக்கு தயாரான சிறுமலை பன்னீர் திராட்சைகள்: கிலோ ரூ.40க்கு விற்பனை

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள சிறுமலை அடிவார கிராமங்களான வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 வருடங்களாக திராட்சை பயிரிடப்பட்டு வருகிறது. மண்வளம் மற்றும் சிறுமலையில் இருந்து வரும் ஊற்று நீர்களால் இப்பகுதியில் விளையும் திராட்சைகள் நன்கு ருசியுடன் இருக்கிறது. மேலும் நல்ல நிறத்துடன் திராட்சைகள் வளர்வதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இப்பகுதி திராட்சைகளுக்கு தனி மவுசு உண்டு. நாட்டுக்கொடி திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை என்ற பெயருடன் இங்கு விளைவிக்கப்படும் திராட்சை அறுவடை செய்யப்பட்டு 10 நாட்கள் வரை உதிராமல் இருப்பதால், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து திராட்சை பயிரிடும் விவசாயி கருப்பையா கூறுகையில், ஒவ்வொரு வருடமும் தண்ணீர் சரிவர பாய்ச்ச முடியாததால் திராட்சை விவசாயம் பாதிக்கும். மேலும் ஒரு சில வருடம் காய்கள் கனிந்து வரும்போது மழை வந்து கெடுத்துவிடும். தற்போது பழங்களை அறுவடை செய்யலாம் என நினைத்தோம். ஆனால் தொடர் மழையால் கடந்த வாரம் 1 கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்ற திராட்சை, தற்போது மேலும் விலை குறைந்து 1 கிலோ ரூ.30 முதல் 40 வரை விற்கிறது என்றார்….

The post தொடர் மழையால் விலை வீழ்ச்சி; அறுவடைக்கு தயாரான சிறுமலை பன்னீர் திராட்சைகள்: கிலோ ரூ.40க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Dindigul district ,Vellodu ,Perumalkovilpatti ,Amalinagar ,J. Oothupatti ,Jatikakundanpatti ,Chetiyapatti ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...