×

சென்னையில் 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது 108 அவசர ஊர்தி: அன்புமணி பாராட்டு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத் தான் எனது பதவிக் காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்கப்பட்டிருப்பதால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post சென்னையில் 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது 108 அவசர ஊர்தி: அன்புமணி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anbumani ,BAMA ,President ,Twitter ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...