×

கடத்திச்சென்று திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ரேவதி (46), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 12ம் தேதி தனது 16 வயது மகளை காணவில்லை என சூளைமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்று, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மேலும், கடத்தப்பட்ட  சிறுமியை பத்திரமாக மீட்டனர். சிறுமி தொடர்பான பிரச்னை என்பதால், இந்த வழக்கை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து, பிடிபட்ட வாலிபரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வசந்தகுமார் (19) என்பதும், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று சென்னை பெசன்ட்நகர் கிறிஸ்தவ தேவாலயம் அருகில் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் போலீசார் சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்றது, போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post கடத்திச்சென்று திருமணம் செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Volleyber ,Boxo ,Annagar ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...