×

மண்டபங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும்: மண்டல குழு தலைவரிடம் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்  35க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் சொத்து வரியை மாநகராட்சி 3 மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால், திருமண மண்டபங்களில் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பாதிப்பதோடு திருமண மண்டபங்களில் உரிமையாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுகிறது.எனவே, திருமண மண்டபம் நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும்,பொதுமக்களின் நலனுக்காகவும் திருமண மண்டபங்களின் இடத்தை முறையாக அளவிட்டு, 3 மடங்காக உயர்த்தப்பட்டிருக்கும் சொத்துவரியை குறைக்க கோரி, திருமண மண்டப உரிமையாளர்கள் திருவொற்றியூர் பொதுவர்தகர் சங்க தலைவர் வே.ராமசாமி தலைமையில் முருகேசன், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் மண்டல அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்….

The post மண்டபங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியை குறைக்க வேண்டும்: மண்டல குழு தலைவரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Zonal Committee ,Tiruvottiyur ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...