×

காங்கிரஸ் பிரமுகரை கடத்திய 4 பேர் கைது

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, காங்கிரஸ் பிரமுகரை பைக்கில் கடத்திய 4 பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (43), காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவர், தனது நண்பர் அருள்செல்வன் என்பவருடன் சேர்ந்து பட்டதாரிகளிடம் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுத்த யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை, பணமும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பரத் உள்பட 4 பேர் நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகரில் உள்ள சதீஷ்குமார் மற்றும் அருள்செல்வனை சந்தித்து பணம் கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் இருவரையும் பைக்கில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது அருள்செல்வம் மட்டும் பைக்கில் இருந்து தப்பி வந்து, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் 4 பேரை கைது செய்தனர். …

The post காங்கிரஸ் பிரமுகரை கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Congress ,CHENNAI ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...