×

கோடியக்கரையில் சீசன் களைகட்டியது: தினமும் 5 டன் மீன், இறால், நண்டுகள் சிக்குகிறது: மீனவர்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம்: கோடியக்கரையில் சீசன் களைகட்டியதால் தினமும் 5 டன் மீன், இறால், நண்டுகள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் மார்ச் மாதம் வரை தங்கி மீன்பிடி தொழில் செய்ய படகுகள் மற்றும் குடும்பத்துடன் வரத்தொடங்கியுள்ளனர். தற்போது வெளியூர் மீனவர்களுடன், உள்ளுர் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிதொழிலுக்கு செல்கின்றனர்.மீனவர்கள் வலைகளில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் மட்லீஸ்மீன் காலா, ஷீலா, வாவல், திருக்கை, மற்றும் சிறிய வகை மீன்களான தோளி, வெள்ளம் தோகை பொடி, பன்னா உட்பட பல்வேறு வகை மீன்களுடன் வகை வகையான நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, கல்நண்டு, சிலுவை நண்டு மற்றும் இறால் வகைகளும் கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு இரண் டன் முதல் 5 டன் வரை மீன்கள் இறால், நண்டு கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து கோடியக்கரை மீனவநல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறியதாவது, மீனவர்கள் வலையில் நீலக்கால் நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. அதனை கடற்கரையிலேயே அவித்து ஐஸ் கிரிம் செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டத்திற்கும் நீலக்கால் நண்டு அனுப்பி வைத்தால் சரியான விலை கிடைக்கவில்லை. முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலைபோன நீலக்கால் நண்டு, தற்போது ரூ.300க்கு விலை போகிறது. இதற்கு காரணம் கோடியக்கரையில் கிடைக்கும் நீலக்கால் நண்டு தற்போது, இந்தோனேசியா நாட்டிலும் அதிகம் கிடைக்கிறது. இங்கு விற்பனையாவதை விட இந்தோனேசியாவில் பல மடங்கு விலை குறைவாக உள்ளதால், அங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தற்போது இந்த விலை விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சி ஓரிரு மாதத்தில் சரியாகும் என்றார்….

The post கோடியக்கரையில் சீசன் களைகட்டியது: தினமும் 5 டன் மீன், இறால், நண்டுகள் சிக்குகிறது: மீனவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodiakarai ,Kodiakkarai ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...