×

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரவாதி ஷாஃபி, பகவல் சிங் – லைலா தம்பதிக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்கப்பட்டது. 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.நீதிமன்ற காவலில் உள்ள பகவல் சிங் – லைலா தம்பதி மற்றும் மந்திரவாதி ஷாஃபி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த 2 பெண்கள் மட்டும் தான் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் இப்பகுதியில் வேறு யாரேனும் இதுபோன்று கொலை செய்யப்பட்டுள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக 13 பெண்கள் காணாமல் புகார் இருந்த நிலையில் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பகவல் சிங் – லைலா தம்பதி மற்றும் மந்திரவாதி ஷாஃபி ஆகிய மூவரையும் 12 நாட்கள் காவலில் வைத்துள்ளனர். …

The post கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Magician Shafi ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...