×

ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அருகே அனகாபுத்தூர், 200 அடி சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் ஒருவர் ஆட்டோவில் கஞ்சா விற்றபோது சங்கர் நகர் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது ஆட்டோவை சோதனை செய்தபோது, பின்பக்க சீட்டுக்கு அடியே சிறுசிறு பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி  விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில் புழல் அருகே காவாங்கரை, லூர்துமாதா நகர், 2வது தெருவை சேர்ந்த செல்வம் (55), வடபழனி, ஒட்டகபாளையம், 11வது தெருவை சேர்ந்த விஜயன் (42) என்பதும், இவர்கள் பல ஆண்டுகளாக ஆட்டோ சவாரி செல்வது போல் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், அதில் கிடைத்த பணத்தில் புதிதாக ஒரு ஆட்டோவை வாங்கி, அதையும் கஞ்சா விற்பனை தொழிலுக்கு ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.  இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன….

The post ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Anakaputtur ,Shankar ,Dinakaran ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...