×

சாய்பாபாவுக்கு பிரியமான 7 பொருட்கள் செலுத்தி வழிபாட்டால் ஆசி பரிபூர்ணமாக கிடைக்கும்..!!

சாய்பாபாவை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை சொல்லப்படுகிறது. இந்த நாளில் சாய்பாபாவிற்கு பிரியமான 7 பொருட்களை அவருக்கு காணிக்கையாக்க நம்முடைய பாவங்கள் விலகும். சாய்பாபாவின் ஆசி பரிபூர்ணமாக கிடைக்கும் என்றும் சொல்லபடுகிறது.

சாய்பாபாவிற்கு பிடித்த 7 பொருட்கள் :

கீரை: கீரை சத்தான உணவு மட்டுமல்ல சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமான உணவும் கூட. வியாழக்கிழமையில் சாய் பாபா கோவில்களில் நடக்கும் அன்னதானங்களுக்கு கீரை வாங்கிக் கொடுக்கலாம்.

அல்வா: நமக்கு பிடித்ததை போலவே சாய்பாபாவிற்கும் அல்வா மிகவும் பிடித்த ஒன்று. சாய்பாபாவிற்கு கோதுமை மாவு அல்லது ரவையில் செய்த அல்வாவை காணிக்கையாக கொடுக்கலாம்.

கிச்சடி: சாய்பாபா மிகவும் எளிமையாக அருள் புரியக் கூடியவர். தோற்றத்திலும் மட்டுமின்றி அருள் செய்வதிலும் எளிமையானவர். இவருக்கு எளிய உணவான பருப்பு சாதம், கிச்சடி அல்லது கலவை சாதம் ஆகியன மிகவும் விருப்பமான ஒன்று.

தேங்காய்: பொதுவாக அனைத்து தெய்வங்களுக்குமே வழிபாட்டிற்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. சாய்நாதருக்கும் தேங்காய் பிடித்தமானது. அதனால் வியாழக்கிழமையில் பாபாவிற்கு தேங்காய்களை காணிக்கையாக கொடுக்கலாம்.

மலர்கள்: சாய்பாபா கோவிலுக்கு செல்லும் போது உதிரிப்பூக்களாக வாங்கிக் கொடுப்பதை விட கட்டிய பூச்சரம் அல்லது மாலையை அவருக்கு காணிக்கையாக கொண்டு செல்ல வேண்டும். பல வண்ண மலர்களால் அர்ச்சிப்பது பாபாவிற்கு பிடித்தமான ஒன்று.

பழங்கள்: இவனி சுவை உள்ள அனைத்து பழங்களும் சாய்பாபாவிற்கு பிரியமானவை. அதனால் சாய்பாபாவிற்கு காணிக்கையாக இனிப்பான எந்த பழத்தை கொடுத்தாலும் அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்.

இனிப்புக்கள்: நம்மை போலவே இனிப்புக்களை மிகவும் விரும்பக் கூடியவர். அவருக்க பசும் பாலில் தயார் செய்த, அதுவும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே செய்யும் இனிப்பு வகைகள் பாபாவிற்கு பிடித்தமான ஒன்றாகும்.

சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த 7 பொருட்களை அவரை வழிபடுவதற்கு ஏற்ற வியாழக்கிமையில் அவருக்கு காணிக்கையாக வழங்கினால் அவருடைய அருளாசியை நாம் முழுவதுமாக பெற்று விடலாம்.

Tags : Saibaba ,
× RELATED கோவையில் வாக்கு இயந்திரம்...