×

செல்போன் பறித்ததை தடுத்த ஆட்டோ டிரைவருக்கு பிளேடு வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி காலனி 28வது தெருவை சேர்ந்தவர் முஷரப் (25). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வியாசர்பாடி, எருக்கஞ்சேரி ரோடு பகுதியில் ஆட்டோவில் சவாரிக்காக நின்றார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் வந்து முஷரப் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுக்க முயன்றனர். உடனே, கையை தட்டி விட்டு முஷரப் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த ஒரு நபர் தனது பாக்கெட்டில் இருந்த பிளேடை எடுத்து முஷரப்பின் கன்னத்தில ஓங்கி வெட்டிவிட்டு ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் முஷரப்பை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முகத்தில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளன. புகாரின்படி, எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்….

The post செல்போன் பறித்ததை தடுத்த ஆட்டோ டிரைவருக்கு பிளேடு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Vyasarbadi B. Musharab ,V Colony 28th Street ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு