நன்றி குங்குமம் ஆன்மிகம்
சப்த விடங்கத் தலங்களாக திருவாரூர், திருநள்ளாறு, திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு முதலிய தலங்கள் நடராஜப் பெருமானுக்குரிய தலங்களாகும். ஒவ்வொரு தலத்திலும் அவரது தனித்தன்மையான நடன முறைகள் உள்ளன.
திருநள்ளாறு : இத்தலத்தில் இறைவன் ஆடுவது பித்து கொண்டவன் தலையைச் சுற்றி ஆடுவது போல் ஆடும் நடனம். இவ்வகையான நடனத்திற்கு ‘உன்மத்த நடனம்’ என்று பெயர்.
திருவாரூர்: மேலும் கீழும் ஏறி இறங்கியும், முன்னும் பின்னும் சென்று வந்தும் அடியவர்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்த இறைவன் இங்கே ஆடுவது ‘‘அஜபா நடனம்’’.
திருமறைக்காடு: அன்னப்பறவை நடப்பது போன்று ஆடும் நடனம். இத்தலத்தில் ஈசன் ஆடிய இந்த நடனத்திற்கு ‘‘ஹம்சபாத நடனம்’’ என்று பெயர்.
திருக்காறாயில் : சேவற்கோழி நடப்பது போன்று ஆடும் நடனம். இதற்கு ‘குக்குட நடனம் என்று பெயர். இறைவனின் இவ்வகையான நடனம் இத்தலத்தில் நடந்தேறியது.
திருநாகைக் காரோணம்: கடலில் தோன்றும் அலைகளின் அசைவை நிகர்த்த நடனம் இங்கே ஈசன் ஆடுவது. இதற்கு பாராவர தரங்க நடனம் என்று பெயர்.
திருவாய்மூர்: நீர் நிறைந்த குளத்தில் ஒற்றைத் தாளில் நிற்கும் தாமரை மலர் காற்றால் தள்ளுண்டு மெல்லென ஆடுவது போன்ற நடனம் ‘கமல நடனம்’ இங்கே பரமன் ஆடுவது இதுவே.
திருக்கோளிலி: மலர்களுக்குள் வண்டு குடைந்து சென்று ஆடுவது போன்ற நடனம். இவ்வகையான நடனம். விருங்க நடனம். இது இக்கோயிலில் நடராஜப் பெருமானால் நிகழ்த்தப்பட்டது.
தொகுப்பு - ஆர்.ஜெயலட்சுமி