×

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி?: தபெதிக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க பள்ளி சாலையில், கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியது. அந்த அமைப்பை சேர்ந்த பலர் பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று உறுதி மொழி எடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,“மாநகராட்சி பள்ளி வளாகத்தில் எந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கொடுக்கப்படவில்லை. பயிற்சி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்….

The post கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி?: தபெதிக-வினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : RSS ,Coimbatore Municipal School ,Tabetika ,Vinar ,Coimbatore ,
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...