×

கடத்தூர் வாரச்சந்தையில் ₹18லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

கடத்தூர் : தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த சந்தையில், மணியம்பாடி, ஒடசல்பட்டி, சில்லாரஅள்ளி, நல்லகுடலஅள்ளி, கோம்பை, அய்யம்பட்டி, கேத்துரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று வெற்றிலைகளை வாங்கி சென்றனர். 128 (கவுளி)கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ₹9ஆயிரம் முதல் அதிகபட்சமாக, ₹15ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் மொத்தம் ₹18லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். …

The post கடத்தூர் வாரச்சந்தையில் ₹18லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை appeared first on Dinakaran.

Tags : betel ,Kaduur ,Dharmapuri ,Maniambadi ,Odasalpatti ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கண்ணாடி உடைந்தது