×

வலம் வரும் முறைகளும் பலன்களும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நாம் ஆலயத்திற்கு சென்றால், பொதுவாக கடவுளை மூன்று முறை வலம் வந்து வணங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஆனால், எந்த கடவுளை எத்தனை முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதன் படி வணங்கி கடவுளின் அருளைப் பெறுவோம். நாம் கடவுளை தரிசித்து வலம் வரும் போது, தெய்வ சிந்தனையும், கடவுளின் போற்றியை சொல்லிக் கொண்டே வலம் வர வேண்டும்.

ஆலயத்தில், நம் கூட வருபவரிடம் பேசிக்கொண்டே வலம் வரக் கூடாது. ஆலயத்தில் இருக்க கூடிய கடவுளான விநாயகரை ஒரு முறையும், ஈஸ்வரனை மூன்று முறையும், அம்மன் மற்றும் பெருமாளை ஐந்து முறையும், நவகிரகத்தை ஒன்பது முறையும் சுற்றி வலம் வர வேண்டும். அரசமரத்தை காலையில் சுற்றி வருவதுதான் உன்னதமானது. ஏனெனில், அரசமரத்திலிருந்து செரிட்டோன் (Ceritone) என்ற வாயு வெளிவரும். அதை நாம் சுவாசித்தால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல், பெண்களுக்கு கர்ப்பப்பை வலுசேர்க்கும். அரசமரத்தை ஏழு முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். அதுவும் காலை 9 மணிக்குள்  அரச மரத்தை சுற்ற வேண்டும். நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்தையும் வலம் வந்து வணங்கும் முறையை தெரியப்படுத்தி உள்ளனர்.

திருமணத்தில் 7 முறை அக்னி வலம்

திருமணத்தின் போது புதுமண தம்பதியினர் அக்னியை 7 முறை சுற்றுவார்கள். அவை ஏன் என்று நாம் தெரிந்து கொள்வோம். இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காக செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. வாழையடி வாழையாக நாம் இந்த வழக்கத்தை செய்து வருகிறோம்.

முதல் அடி - பஞ்சமில்லாமல் இருத்தல்.
இரண்டாம் அடி -  உள்ளமும், உடலும் ஆரோக்கியமாக வாழ.
மூன்றாம் அடி - நல்ல காரியங்கள்
எப்பொழுதும் தொடர.
நான்காவது அடி -  சுகத்தையும்,
செல்வத்தையும் அளிக்கவும்.
ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம்
நிறைந்து பெறவும்.
ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடரவும்.
ஏழாவது அடி - தர்மங்கள் என்றும் நிலைக்கவும்.
நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்தையும் வலம் வந்து வணங்கும் முறையையும் மற்றும் திருமண சடங்குபற்றியும் நமக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

தொகுப்பு: அனுஷா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?