×

ஆன்மிகம் அறிவோம்

*விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள் அதனால் கருவறையில் தேவிக்கு முன்சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளவர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் தம் கண்களைக் கழுவி நோய் நீங்கப்பெறுகிறார்கள்.

*மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமானதீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

*மதுரை எல்லீஸ் நகரில் தேவி கருமாரியம்மனை தரிசிக்கலாம். இத்தேவியை அனைத்து மதத்தினரும் வழிபட்டு அருள்பெறுவது சிறப்பு.

*புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

*நீலகிரி குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் பக்தர்கள் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள உடனே
பெருமழை பெய்கிறது.

*ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இரு தேவியரும் ஒரே கருவறையில் வீற்றருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிகயிற்றைக் கட்ட தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலகுகின்றனவாம்.

*நாமக்கல் ராசிபுரத்தில் நித்யசுமங்கலிமாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்க்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.

*கோவையில் ஆட்சிபுரியும் தண்டுமாரியம்மன், குடும்பவளம் பெருகவும், தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

*சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

*திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள்கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு பெறுகிறார்கள்.

*கோடீஸ்வரி மாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.

*தேனி பெரிய குளத்தில் வீற்றிருக்கும் கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

*கரூர் மகாமாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கஅருள்கிறாள்.

*திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும், மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.

*தஞ்சைபுன்னைநல்லூர் மாரியம்மன், துள்ஜா மன்னர் மகளின் கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு  யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.

*காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளிப் பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம்நடத்தப்படுகிறது.

*கோவை, உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் அருள்கிறாள். மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

மகேஸ்வரி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?