×

நீலகண்ட அஷ்டமி : இந்த வார விசேஷங்கள்

 19.7.2022 - செவ்வாய்  சஷ்டி

இன்றைய நாளின் மிக முக்கியம் என்னவென்றால், செவ்வாய்க்கிழமை அதாவது முருகனுக்கு உரிய கிழமை நாளில் வாக்கிய பஞ்சாங்கப்படி முருகனுக்கு உரிய சஷ்டி விரதம் வருகிறது. சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். குழந்தைப் பேறு பெற காத்திருப்பவர்களுக்கு மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும். மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து,நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் அன்று அசைவ உணவைத் தவிர்த்து, மாலை முருகன் கோயிலுக்கு, அல்லது சிவ ஆலயத்துக்குள் இருக்கும் முருகன் சந்நதிக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

20.7.2022 - புதன்  நீலகண்ட அஷ்டமி

சிவபெருமானுக்கும் சிவபெருமானுடைய அம்சமான கால பைரவருக்கும் உகந்த நாட்கள் தேய்பிறை அஷ்டமி நாட்கள். ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த அஷ்டமி நாளில் காலையில் சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் காலபைரவரை தரிசனம் செய்வதன் மூலமாக நம்முடைய கஷ்டங்கள் விலகும். ஆடிமாத தேய்பிறை அஷ்டமி நீலகண்ட அஷ்டமி என்று சொல்வார்கள். இந்த அஷ்டமியின் சிறப்பு பலனாக வித்தையில் மேன்மை ஏற்படும். மாணவர்கள் கால பைரவரை வணங்கினால் தேர்வுகளில் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவார்கள்.கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். சகல துறைகளிலும் மேன்மை ஏற்படும். பல சிவாலயங்களில் இப்பொழுது பைரவர் சந்நதிகள் ஏற்படுத்தப்பட்டு அஷ்டமி பூஜை விரிவாக செய்யப்படுகின்றன. பைரவருக்கு குளிரக் குளிர அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் கலந்து கொள்ளலாம். அபிஷேக சாமான்கள் வாங்கி தரலாம். ஆதிசங்கரர் அருளிய சக்தி வாய்ந்த பைரவாஷ்டகத்தை சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேய்பிறை அஷ்டமியிலும் பாராயணம் செய்யுங்கள். தீராத நோயும் தீரும்.

Tags : Neelakanda Ashtami ,
× RELATED சுநந்தாபீடம் – சுநந்தா