×

கோடீஸ்வரராக வேண்டுமா?: சனியின் ஆதிக்கம், கர்ம வினை நீக்கும் கோமாதா வழிபாடு..!!

பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது' என்பார்கள். அந்த அளவுக்கு பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு 'கோமாதா'  என்ற சிறப்பான பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். அப்படிக் கடவுளுக்கு நிகரான  கோமாதாவின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது  நந்தா, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக  நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன.

பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் சகலவிதமான தெய்வங்களும், பார் போற்றும் முனிவர்களும், நவகிரகங்களும் இருக்கின்றன. கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகிறது.
அதனால்தான் கோமாவுக்குப் பூஜை செய்தால், நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கிறது. அனைத்து விதமான தோஷங்களும் நீங்குகிறது.

கோமாதாவை வழிபட வேண்டிய முறை:

பசுவை இறைவனின் வடிவமாகக் கருத வேண்டும். கோமாதா பூஜையின்போது, கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி  மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல் மற்றும் பல்வேறு வகையான பழங்களைப் படைக்க வேண்டும்.

நெய் விளக்கில் ஆரத்தி எடுக்க வேண்டும். எடுத்தப் பின்னர் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின்பு மீண்டும் நெய் தீபத்தால் ஆரத்தி எடுத்து மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின்போது கன்றுடன் சேர்த்துதான் பூஜிக்க வேண்டும்.

வீட்டில் பூஜை நடத்த இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச்  சென்று வழிபடலாம். கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் வழிபடலாம்.

நன்மைகள்:


கோமாதாவைத் தெய்வமாக நினைத்து விரதமிருந்தால், கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.

பசுவுக்கு உணவளித்தால் நம் கர்ம வினைகள், சாபங்கள் நீங்கும்.

பசுவின் மேன்மைகள்:

பசுவைச் சிறப்பிக்காத புராணங்களே இல்லை எனலாம்.

பசுவின் சாணத்தில் லக்ஷ்மி குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

பசுவின் கோமியமானது கங்கைத் தீர்த்தம்போல் பாவிக்கப்படுகிறது.

பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படும் திருநீறு தெய்விகத்தன்மை உடையது.

Tags : Saturn ,
× RELATED இந்த வார விசேஷங்கள்