×

கோவையில் அழகுநிலைய ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு..!!

கோவை: கோவையில் இளைஞர் கொலை செய்யப்பட்டு சடலத்தை 12 துண்டுகளாக வெட்டி தனி தனி இடங்களில் வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு, கோவையில் உள்ள அழகுநிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், திருமணமான கவிதா என்ற பெண்ணுக்கும் திருமண பந்தத்தை மீறிய பழக்கம் இருந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரபு கவிதாவின் அந்தரங்க புகைப்படங்களை அவரது கணவரிடம் காட்டிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, தனது நண்பர்களான திவாகர் மற்றும் கார்த்தியுடன் இணைந்து பிரபுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை 12 துண்டுகளாக வெட்டி தனி தனி இடங்களில் வீசியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொலையில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. …

The post கோவையில் அழகுநிலைய ஊழியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Temple ,Govai ,Khova ,Tema ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்