- முகுந்தகிரி
- சிக்கூர்
- பிரதமர் மோடி
- செங்கல்பட்டு
- சித்தூர்
- சித்தாமூர் மண்டல பாஜா கட்சி
- முகுந்தகிரி
- தின மலர்
செய்யூர்: பிரதமர் மோடி பிறந்தநாள் விழா, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சித்தாமூர் மண்டல பாஜ கட்சி சார்பில், முகுந்தகிரி ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, அரசு துவக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு மதிய உணவு வழங்குதல், நோட்டு, பேனா, பென்சில் வழங்குதல் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சித்தாமூர் மண்டல தலைவர் பகதூர் சேட் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சண்முகம் முன்னிலை வகித்தார். அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் கோபுராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில், செங்கல்பட்டு மாவட்ட துணை தலைவர் பிரவீன் குமார் கலந்துகொண்டு பள்ளி சிறுவர்களுக்கு மதிய உணவு மற்றும் பேனா பென்சில் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பாஜ கட்சி நிர்வாகிகள் பழனி, சண்முகம், செந்தில், கிருஷ்ணன், பாலமுருகன், சுரேஷ், துரை, பெரியசாமி, சிவா, வெங்கடேஷ், அருள், அசோக், காளி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்….
The post முகுந்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு உதவி appeared first on Dinakaran.