×

ஆட்டோ டிரைவர் கொலை விஷம் குடித்த கள்ளக்காதலி மருத்துவமனையில் சாவு

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சக்திவேல்(32), ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் பண்ருட்டி களத்துமேடு பகுதியை சேர்ந்த சுமன் (25). இருவருக்கும் ஒரே பெண்ணுடன் பழகுவது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் செடல் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட சக்திவேலும், சுமனும் இரவில் அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே அந்த பெண் யாருக்கு சொந்தம் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுமனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த சுமன், பட்டிஸ்டா குணா, வசந்தகுமார், குணா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சக்திவேல் மற்றும் சுமனின் கள்ளக்காதலி பூமிகா (24) என்பவர் மனஉளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்து விட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். …

The post ஆட்டோ டிரைவர் கொலை விஷம் குடித்த கள்ளக்காதலி மருத்துவமனையில் சாவு appeared first on Dinakaran.

Tags : Kallagadali ,Panruti ,Chakarpani ,Sakthivel ,Thattanjavadi Gandhi Nagar ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது