×

கும்பக்கரை அருவியில் குளித்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (48). அங்கு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ேநற்று தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சென்றுள்ளார். அருவியில் குளித்து கொண்டிருந்த போது, ஹரிஹரன் திடீரென மயங்கி  விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்….

The post கும்பக்கரை அருவியில் குளித்த புதுச்சேரி போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Puducherry Police ,Kumbakkar ,Periyakulam ,Lotu ,Puducherry ,Kumbakarai ,Fallen ,Fallen Sawu ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி