×

சகோதரி வேடத்தில் நடிக்க பயந்தேன்: திரிஷா

சென்னை: கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கியுள்ளார், மணிரத்னம். இதன் முதல் பாகம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்துள்ள திரிஷா கூறியதாவது: இதுவரை வரலாற்றுக் கதை கொண்ட படத்தில் நடித்ததில்லை. திடீரென்று இந்த வாய்ப்பு கிடைத்ததும் தயங்கினேன். அதற்கு காரணம், எனக்கு தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியாது. எனது படங்களுக்கு மற்றவர்கள்தான் டப்பிங் ேபசுவார்கள். மணிரத்னம் எனக்கு அதிகமான நம்பிக்கை கொடுத்தார். நானும் தீவிர பயிற்சி பெற்று, வசனத்தை நானே பேசி நடித்தேன். அதுபோல், சில படங்களில் நான் விக்ரம், ஜெயம் ரவி ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளேன். எங்கள் ஜோடி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இப்படத்தில் இருவருமே எனது சகோதரர்களாக நடித்துள்ளனர். ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பயந்தேன். நடிக்கத் தொடங்கிய பிறகு பயம் போய்விட்டது. அனைவரும் அந்தந்த கேரக்டர்களாகவே மாறிவிட்டதால், எங்களின் முந்தைய படங்களின் பிம்பங்கள் மறைந்து விட்டது. ஆக, ரசிகர்களும் எங்களை அந்தந்த கேரக்டர்களாகவே ஏற்றுக்கொள்வார்கள்….

The post சகோதரி வேடத்தில் நடிக்க பயந்தேன்: திரிஷா appeared first on Dinakaran.

Tags : Tirisha ,Chennai ,Kalki ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்