×

இருக்கையை சேதப்படுத்தி, பணிப்பெண்ணை தாக்கி பாக். விமான பயணி நடுவானில் அட்டகாசம்: துபாயில் தரையிறங்கியதும் கைது

கராச்சி: பாகிஸ்தான் விமானத்தில் பயணித்த விமானி ஒருவர், நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது அட்டகாச செயல்களை செய்ததால் அவரை துபாய் போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் – துபாய் செல்லும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த 14ம் தேதி பயணம் செய்த பயணி ஒருவர், திடீரென தனது இருக்கையை சேதப்படுத்தினார். பின்னர் விமானத்தின் ஜன்னலை எட்டி உதைத்தார். அதை தடுக்க முயன்ற விமான பணிப்பெண்களையும் தாக்கினார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பயணி ஒருவரின் இந்த நடவடிக்கை, சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்ரோஷமாக செயல்பட்ட அந்த பயணி, ஒருகட்டத்தில் தனது இருக்கையில் அமர்ந்தவாறே தனது முகத்தை குனிந்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அங்கிருந்தவர்களை திட்டினார். அதையடுத்து விமானத்தின் கேப்டன் துபாய் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்புகொண்டு, தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரினார். அதையடுத்து விமானம் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அடாவடி செயல்களில் ஈடுபட்ட அந்த சைக்கோ பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

The post இருக்கையை சேதப்படுத்தி, பணிப்பெண்ணை தாக்கி பாக். விமான பயணி நடுவானில் அட்டகாசம்: துபாயில் தரையிறங்கியதும் கைது appeared first on Dinakaran.

Tags : Bach ,Naduanil Atakasam ,Dubai ,Karachi ,Naduwan ,Naduan Atakasam ,Dinakaran ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...