×

114 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட டிராமா

சென்னை: பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ என்ற படம், ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்ட படமாக திரைக்கு வந்தது. தற்போது அதே பாணியில் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம், ‘டிராமா’. வரும் 23ம் தேதியன்று திரைக்கு வரும் இப்படத்துக்கு ஷினோஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து இயக்குனர் அஜூ கசுமலா கூறியதாவது: ஒரு காவல் நிலையத்தில் திடீரென்று பத்து நிமிடங்கள் வரை மின்சாரம் நின்றுவிடுகிறது. அப்போது அங்கு ஒரு கொலை நடக்கிறது. அந்நேரத்தில் அங்கு 12 பேர் இருக்கின்றனர். அவர்களில் அந்தக் கொலையைச் செய்தது யார் என்று கண்டுபிடிக்கும்போது நடக்கும் பரபரப்பான சம்பவங்களின் தொகுப்புதான் கதை. முக்கிய வேடங்களில் கிஷோர், ஜெய்பாலா, காவ்யா பெல்லு, சார்லி நடித்துள்ளனர். 180 நாட்கள் ஒத்திகை பார்த்து, ஒரு மணி நேரம் 54 நிமிடங்களில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிளாஷ்பேக், பாடல் காட்சிகள் போன்றவை இடம்பெறும். கேரள மாநிலம் காசர்கோட்டில் போலீஸ் ஸ்டேஷன் செட்டுகளை அமைத்து பல்வேறு கோணங் களில் படப்பிடிப்பு நடத்தினோம்’ என்றார். …

The post 114 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட டிராமா appeared first on Dinakaran.

Tags : Chennai ,Parathiban ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...