×

தாம்பரம் அருகே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: 4 வாலிபர் கைது

தாம்பரம் :தாம்பரம் அருகே, ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம், சானடோரியம் பகுதியில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் உள்ளது. இங்கு பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்க்கு நேற்று அதிகாலை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்தது. பின்னர், அவர்கள் சுத்தி மற்றும் உளி போன்றவற்றால்   ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில், ஏடிஎம் மையத்தில்  இருந்து, எச்சரிக்கை தகவல் ஹைதராபாத்தில் உள்ள அவ்வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த வங்கி ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள இவ்வங்கி அதிகாரி ராஜ பெருமாள் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில்,  தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது நான்கு பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் சுத்தி மற்றும் உளி ஆகிய பொருட்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நான்கு பேரையும் மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பொத்தேரி பகுதியை சேர்ந்த அன்பழகன் (20), சீர்காழியை சேர்ந்த ராஜேஷ்குமார் (22), சோழிங்கநல்லூரை சேர்ந்த அருண்குமார் (20), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், இவர்கள் பெயிண்டிங், டிரைவர், நாற்காலி பழுது பார்ப்பது உள்ளிட்ட வேலைகள் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தாம்பரம் நீதிமன்றத்தில் நால்வரையும் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்….

The post தாம்பரம் அருகே ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: 4 வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Copper ,Waliber ,Tambaram ,Dinakaraan ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...