×

விபத்தில் ஐடி ஊழியர் பலி

வேளச்சேரி: மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரிசங்கர் குமார் (24), ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை பைக்கில் மேடவாக்கம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, முன்னாள் சென்ற கார் திடீரென திரும்பியது. இதனால், நிலைதடுமாறிய அரிசங்கர் குமார் பைக் கார் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான  சித்தாலப்பாக்கம், சங்கராபுரம் பகுதியை  சேர்ந்த பிரவீன் குமாரை (32) கைது செய்தனர்….

The post விபத்தில் ஐடி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Arisankar Kumar ,Medavakkam ,Rajivkandi Road ,Dinakaran ,
× RELATED மேடவாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து