×

திருச்செந்துறையில் உள்ள நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம்: மாவட்ட ஆட்சியர் மறுப்பு

திருச்சி: திருச்செந்துறையில் உள்ள நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என எழுந்த புகாருக்கு ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். திருச்செந்துறையை சேர்ந்த ராஜகோபால் புகார் அளித்திருந்த நிலையில் ஆட்சியர் பிரதீப் குமார் விளக்கம் அளித்துள்ளார். ராஜகோபால் தற்போது நிலத்தை பதிவு செய்து விட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 1928ம் ஆண்டு முதல் நில உரிமையாளர்களிடமே சொத்துக்கள் இருப்பது தெரிய வருகிறது என்றும் நில உரிமையாளர்கள் பெயரில் தான் ஆவணங்கள் உள்ளது என்றும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். …

The post திருச்செந்துறையில் உள்ள நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம்: மாவட்ட ஆட்சியர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchenthurai ,Waqf Board ,Trichy ,Tiruchenthurai ,Wakpu Board ,Dinakaran ,
× RELATED ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா...