×

முகநூலில் மலர்ந்த காதல்; காதலனை கரம்பிடிக்க கடலூர் வந்த ஆந்திரா காதலி.! திருமணம் செய்து வைத்த போலீசார்

கடலூர்: கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலானது. இந்நிலையில் சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தனது காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில் மூலம் கடலூர் வந்துள்ளார். அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் இருந்துள்ளார். உடனே ரயில்வே ஊழியர்கள், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, விரைந்து சென்று அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தார். நடந்த சம்பவத்தை அந்த பெண் கூறினார். இதையடுத்து, சுஜிதாவின் காதலன் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து இன்ஸ்பெக்டர் வரவழைத்தார். பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். வெங்கடேசும் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து வெங்கடேஷ் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டு சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுத்து வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார். இதனால் காதல் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் சென்றனர்….

The post முகநூலில் மலர்ந்த காதல்; காதலனை கரம்பிடிக்க கடலூர் வந்த ஆந்திரா காதலி.! திருமணம் செய்து வைத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Murugadoss ,Venkatesh ,Mariamman Koil Street, Periya Ganganangkuppam ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...