×

மளிகை கடையில் பணம் கொள்ளை

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பழைய பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56). இவர், அதே பகுதியில் மளிகைக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை பாலசுப்பிரமணி பார்த்தபோது, மளிகை கடையின் வெளிப்பக்க கதவின் பூட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு திறந்திருந்தன. கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணம், 2 விலையுயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள், மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து பல்லாவரம் போலீசார்  வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பைக்கில் முகமூடி அணிந்து வந்த ஒரு மர்ம நபர், மளிகை கடையின் பூட்டை உடைத்து, பணத்தை கொள்ளையடித்துவிட்டு சாவகாசமாக திரும்பி செல்வது தெரியவந்தது.  போலீசார் அந்த மர்ம நபரை தேடுகின்றனர்….

The post மளிகை கடையில் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Balasubramani ,Old Pallavaram ,Darga road ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை