×

நண்பனை வெட்டி கொன்றதால் ஆத்திரம் திருமண நிகழ்ச்சியில் கொலை செய்ய திட்டம்: போலீஸ் குவிப்பால் ரவுடி எஸ்கேப்

மாமல்லபுரம்: நண்பனை வெட்டி கொன்றதால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்,  திருமண நிகழ்ச்சியில் கொலை செய்ய திட்டம் திட்டியதால்  மண்டபத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் லெனின் (30). இவரது உறவினர் நரேஷ் பாபு (30). அதேப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (26). இவர்கள் 3 பேரும் ரவுடிகள். இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளனர். இந்நிலையில் லெனின், மேத்யூவின் நண்பரான சூர்யாவை  படுகொலை செய்துள்ளார். இதில் மேத்யூ, லெனின் மற்றும் அவரது சித்தப்பா மகன் நரேஷ் பாபு ஆகிய இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில், நரேஷ் பாபுவின் திருமணம் நேற்று மாலை மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக, நரேஷ் பாபுவை திருமண மண்டபத்திற்குள் புகுந்து வெட்டி கொலை செய்வேன் என மேத்யூ  கடந்த 3 மாதத்துக்கு முன்பு சபதம் போட்டுள்ளார். மேலும், இது குறித்த தகவலறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லில்லி, செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அசோகன், கண்ணகி நகர் கிரைம் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் மண்டபத்தை சுற்றி குவிக்கப்பட்டு, மேத்யூ வருகிறானா என தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது, திருமண மண்டபத்திற்குள் சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், லெனின், நரேஷ்பாபு, மேத்யூ ஆகிய மூவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்….

The post நண்பனை வெட்டி கொன்றதால் ஆத்திரம் திருமண நிகழ்ச்சியில் கொலை செய்ய திட்டம்: போலீஸ் குவிப்பால் ரவுடி எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Roudy Escape ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்