×

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு குண்டாஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, காஞ்சிபுரம் தாலுகா, மாகரல், பாலுசெட்டிசத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில்  காஞ்சிபுரம் உப்பேரி குளத்தைச் சேர்ந்த சலீம் மகன் ஷேக் காதர் (36).இவர் மீது கொள்ளை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர், குற்றவாளி ஷேக் காதரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்….

The post பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,Kanchipuram ,Kanchipuram… ,Rowdyku Guntas ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...