×

கல்லூரி மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் கோமான் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர், இவரது மகள் நித்யா (18). இவர் கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற நித்யா மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது சடலம் தையூர் வயல்வெளி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த சடலத்தை போலீசுக்கு தெரியாமல் வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை தகவலறிந்த கேளம்பாக்கம் போலீஸ் எஸ்ஐ முருகன், போலீசாருடன் அங்கு சென்றார். அப்போது, இளம்பெண் மர்மமான முறையில் இறந்து இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. எனவே, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பிறகு எடுத்துச் செல்லுமாறு கூறினார். ஆனால், உறவினர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து, தையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேலுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து அப்பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர், போலீசார் அனைவரையும் சமாதானம் செய்து அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கல்லூரி மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Ravi Shankar ,Nitya ,Taiyur Koman Nagar ,Kelambakkam ,
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி