×

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

லே: பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனாலும், மாடாங் நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவைத் தவிர, இந்தோனேசியாவிலும் நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவானது….

The post பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Pacific ,Indonesia ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த...