×

தண்டவாளத்தில் இரும்பு ராடு, கல் வைத்து சேலத்தில் ரயிலை கவிழ்க்க சதி: ஊழியரை பழிவாங்க திட்டமிட்ட வாலிபர் கைது

காடையாம்பட்டி: சேலம்-சென்னை ரயில்வே மார்க்கத்தில் தின்னப்பட்டி ரயில்வே யார்டு அருகில் தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  சேலம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி ரயில்வே யார்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை தண்டவாளத்தில் 2 இடத்தில் இரும்பு ராடுகளும், 5க்கும் மேற்பட்ட இடத்தில் அடுத்தடுத்து கற்களும் வைக்கப்பட்டிருந்தது. இதனை அவ்வழியே வந்த நபர் பார்த்து, கீமேன் அருண்குமாரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர் அந்த இரும்பு ராடுகள் மற்றும் கற்களை அப்புறப்படுத்தினார். அந்த நேரத்தில் சுமார் 500 மீட்டர் தொலைவில் சந்தேக நபர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை அங்கிருந்து கீமேன் விரட்டியடித்துள்ளார். இந்த நேரத்தில் அவ்வழியே ரயில்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனே சேலம் ரயில்வே போலீசாரும், ஆர்பிஎப் போலீசாரும் சென்று விசாரணை நடத்தினர்.  தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், இச்செயலில் ஈடுபட்ட காமலாபுரம் ரவிசங்கரை (21) கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘கூலிவேலைக்கு சென்று வரும் ரவிசங்கர், அவ்வப்போது தின்னப்பட்டி ரயில்வே யார்டு பகுதியை கடந்து சென்றுள்ளார். குடிபோதையில் சுற்றி வந்ததால், ரோந்து பணியில் இருந்த கீமேன் அருண்குமார் கண்டித்துள்ளார். அடிக்கடி அவர் தன்னை திட்டி வருவதால், அவரை பழிவாங்க  வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் இரும்பு ராடு, கற்களை எடுத்து வைத்ததாக கூறினார்….

The post தண்டவாளத்தில் இரும்பு ராடு, கல் வைத்து சேலத்தில் ரயிலை கவிழ்க்க சதி: ஊழியரை பழிவாங்க திட்டமிட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Saleam ,Kadaiyampatti ,Dannapatti Railway ,Salem-Chennai Railway ,Dinakaran ,
× RELATED கரும்பு விற்பனை அமோகம்